கடலூர்,டிச.23- குள்ளஞ்சாவடி அருகே நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி இன்பவள்ளி (58). பொன்னியின் குப்பத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில், கரும்பு தோட்டத்தில் சனிக்கிழமை (டிச.23) இன்பவள்ளி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது. ஆடைகள் கலைந்த நிலையில் உடல் கண்டெடுத்தனர். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா, என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே பகுதியில் (டிச.1) அன்று சமட்டிக்குப் பம் மகாலட்சுமி (58) என்ற பெண் கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.