districts

img

எர்ணாவூர் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் சுரங்கப்பாதை தேவை

சென்னை, மார்ச் 3- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வர்டில் 2, 3 பகுதி சபைக்கூட்டம் 2ஆவது பகுதி பிரதிநிதி குணாலன், 3ஆவது பகுதி பிரதிநிதி ராம்குமார் தலைமையில் நடைபெற்றது.  இதில் எர்ணாவூர் பஜனை கோயில் தெரு, மேட்டுத்தெரு, வள்ளுவர் நகர், மாகாளியம்மன் நகர், எர்ணீஸ்வரர் நகர் பகுதி மக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எர்ணாவூர் பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் குறுக்கே ரயில்வே இருப்புப் பாதை உள்ளதால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வது சிரமமாக உள்ளது. எனவே அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவரை நிய மித்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காசநோய், இதயநோய்களுக்கு மாத்திரை வழங்க வேண்டும். திருவீதியம்மன் நகரில் கட்டப்பட்டுள்ள சமூக நல்வாழ்வு ஆரோக் கிய மையத்தை மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாகாளி யம்மன் கோயில் 2, 3 தெருக் களில் திறந்த நிலையில் உள்ள பக்க கால்வாய்கள் திறந்து கிடப்பதால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுத் தெரு, பஜனை கோயில் தெரு சாலைகளை முறை யாக பராமரிக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. மலேரியா துறை அலு வலர் மணிமாறன், குடிநீர் வடிகால் துறை உதவி ஆய்வாளர் மதன்ராஜ், 4ஆவது வார்டு உதவி பொறியாளர் அன்னலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தீர்மானங் களை தொகுத்து பேசினார்.