districts

img

ராணிப்பேட்டையில் மார்க்ஸ் படத்திற்கு மரியாதை

காரல் மார்க்ஸின் 206 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிபிஎம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட குழு அலுவலகத்தில்  மாவட்ட குழு உறுப்பினர் எல்.சி. மணி தலைமையில் ஞாயிறன்று (மே.5) படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன், ஆர். மணிகண்டன், தா. வெங்கடேசன், என். ரமேஷ், ஆ. தவராஜ்,  வாலாஜா தாலுகா குழு உறுப்பினர்கள் ஹரி. கார்த்திக், செந்தில்குமார், ராணிப்பேட்டை நகர குழு உறுப்பினர்கள் கோதண்டபாணி, ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.