சென்னை, செப். 25- பல் வலிக்கு சென்ற நபரிடம் 7.5 லட்சம் ரூபாய் ஏமாற்றி மொத்த பற்களை யும் பிடுங்கிய மருத்துவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கொடுங்கை யூர் கவிஞர் கண்ணதாசன் நகர் 2ஆவது பிரதான சாலை யில் வசிப்பவர் சரவணன். இவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவல கத்தில் தனக்கு தவறாக சிகிச்சை அளித்த மருத்து வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மை யில் மனு அளித்தார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், பல் வலிக்கு சிகிச்சை மேற்கொள்ள நுங்கம் பாக்கத்தில் உள்ள தனி யார் சிகிச்சை மையத்திற்கு சென்றேன். அங்கு மருத்து வர் ரோஷன் பல் பிடுங்கு வதற்காக முதல்கட்டமாக ரூ22 ஆயிரம் வசூலித்தார். பின்னர், படிப்படியாக தாடை அறுவை சிகிச்சை செய்து ரூ10 லட்சம் வரை செலவு செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும் மருத்துவர் ரோஷனுக்கு இதுவரை ரூ7.5 லட்சம் வரை கொடுத்துள்ளேன். அதற்கான முழு ரசீதுகளும், இதுவரை பார்த்த மருத்துவ குறிப்பும் (சம்மரி) அளிக்கவில்லை என்றார். ஒரு பல் ஆட்டத்திற்கு சென்ற எனக்கு தவறுதலாக பல அறுவை சிகிச்சைகள் அளித்து என்னுடைய இடது மேல் பக்க தாடையை அகற்றி, இரும்பு ராடு வைத்து தாடையில் ஓட்டை ஏற்படுத்தி இன்று வரை மூக்கின் வழியாக உணவு உட்கொள்வது மற்றும் நீர் வடியும் நிலையை ஏற்படுத்தி விட்டார், தற்போது மேல் இடது தாடையில் அனைத்து பற்களையும் இழந்து பற் கள் ஏதுமின்றி உள்ளேன். மருத்துவர் ரோஷனின் கவனக்குறைவு மற்றும் தவறுதலால் மட்டும், எனக்கு இவ்வளவு பெரிய கொடுமை நேர்ந்துள்ளது. எனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, உணவு எதுவும் உண்ண முடியாத நிலை மற்றும் பேச முடி யாமலும் முகம் மாற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மருத்துவர் ரோஷன்தான் முழு காரணம். எனவே அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன் என்றார்.