districts

img

டன் கரும்புக்கு ரூ. 5 ஆயிரம் கேட்டு போராட்டம்

விழுப்புரம், ஜூலை 26-

     கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம், பெரிய சாலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆலை சங்க தலைவர் ஜி.சாரங்கபாணி தலைமை தாங்கி னார். தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலை வர் எஸ்.வேல்மாறன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஆலையில் உற்பத்தி ஆகும் சக்கரைக்கான முழு தொகையை யும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

   ஆலை சங்க சிறப்பு தலைவர் வி.கதிரேசன், துணைத் தலைவர் கே.எம். ஜெயராமன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஆர்.தண்டவ ராயன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் கே.சிவக்குமார்,ஆலை சங்க செயலாளர் எஸ்.ஜோதி ராமன், ஆலை சங்க பொருளாளர் எஸ்.திருமால், பி.தங்கவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

      திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சி யில் வேலை அட்டை வழங்கி ஓராண்டாகி யும் வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும், புதிய வேலை அட்டை வழங்க வலி யுறுத்தியும் ஆலங்காயம் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.குணசேகரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன், மாவட்ட துணைத் தலைவர் வ.அருள் சீனிவாசன், விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கே.சாமிநாதன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு செயல் அலு வலரிடம் கோரிக்கை மனு கொடுத்த னர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், இந்தாண்டுக்கான அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் வேலை வழங்குவதாகக் கூறினார்.

கள்ளக்குறிச்சி

     அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய 24 மணி நேர தொடர் முழக்க காத்திருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக் கனந்தல் பேரூராட்சி அலுவலகம் முன்பு வட்டச் செயலாளர் பி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் வி.மாரியப்பன், பி.சுப்பிரமணியன், அ.பா.பெரிய சாமி, ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.