அம்பத்தூர்,ஜூன் 6-
வானகரம் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம்(வயது34). இவர் பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
செவ்வாயன்று அவர் வழக்கம்போல் தனது பைக்கில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். பாடி மேம்பாலம் அருகே வந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமானுஜம் சம்பவ இடத்திலலேயே இறந்தார். லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேகத்தில் ஹெல்மெட்டும் நசுங்கி உடைந்து போனது. விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.