12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சென்னை, மே. 12- கொளத்தூரில் மின்சாரம் பாய்ந்து 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். சென்னை கொளத்தூர் திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் வசிப்பவர் ராஜன். இவர் வீட்டை சுத்தம் செய்வதற்காக தனியார் செயலி மூலம் ஆட்களை நிய மித்தார். இந்த பணிக்காக புழல், காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள சிரோந்தர்ராஜ் (27) என்பவர், முகாமில் தங்கி யுள்ள அவரது உறவினர் சனுஜன் (18) மற்றும் சூர்யா (25) ஆகியோருடன் வீட்டை சுத்தம் செய்வதற்காக சனிக்கிழமை மதியம் சென்றுள்ளனர். சனுஜன் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின்சார வயரின் மீது, அவர் கை பட்டதில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே வீட்டின் உரிமையாளர் ராஜன் மயக்கமடைந்த சனுஜனை தனது காரில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர். இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சனுஜன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இறந்த சனுஜன் இந்தாண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டி ஐடிஐ-யில் மாணவிகள் சேர்க்கை தொடக்கம்
சென்னை, மே 12 - கிண்டியில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2024-25ஆம் ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை மே 10 அன்று தொடங்கியது. ஜூன் 7ந் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேறியவர்கள், தோல்வியுற்றவர்கள், இடை நின்றவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு தேறியவர்கள், தோல்வியுற்றவர்கள் ஓர் ஆண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சியை முடித்தவுடன் 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சியின் போது அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை 2 செட் (தையல் கூலியுடன்), விலையில்லா காலணி, இலவச பேருந்து மற்றும் ரயில் பயணச் சலுகை, மாதாந்திர உதவித் தொகை ரூ.750, தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை, இலவச அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். மாணவிகள் www.skilltraining.gov.in என்ற இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது ஐடிஐக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கிண்டி ஐடிஐ முதல்வர் என்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-2510001, 9840867350, 8838218545 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.skilltraining.gov.in
போகோ டிவியில் புதிய நிகழ்ச்சி
சென்னை,மே12- குழந்தைகள் பொழுது போக்கு சேனலான போகோ கோடைகாலத்தை முன்னிட்டு புதிய நிகழ்ச்சி சியை அறிமுகப்படுத்த யுள்ளது. ‘ஜெய் ஜெகன்நாத்’. புதிய அனிமேஷன் தொடர், இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளி லிருந்து நட்பின் முக்கியத் துவத்தை குழந்தைகளுக்கு போதிக்க உள்ளது. குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் இணைந்து பார்க்கும் வகையில் இந்த தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 20 முதல் காலை 9:30 மணிக்கு இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் மலையா ளம் ஆகிய ஆறு மொழி களில் திரையிடப்படுகிறது. இந்த தகவலை டூன்ஸ் மீடியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி ஜெயக்குமார் தெரிவித் துள்ளார்.
பங்களாதேஷ் நாட்டவர் கைது
ஈரோடு, மே 12- ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் சிறுமியிடம் அத்துமீறியதாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் வசித்து வந்த சுலைமான் கான் (30) என்பவரை, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், சுலைமான் கானிடம் நடத்திய விசாரணையில், அவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அனுமுல்கான் என்பவரின் மகன் என்பதும், இவர் 2017ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் பங்களாதேஷிலிருந்து இந்தியா வந்திருப்பது தெரிய வந்துள்ளது
துருப்பிடிக்காத எப்.இ.550டி சி.ஆர். எஸ்டி.எம்.டி. கம்பிகள் அறிமுகம்
சென்னை, மே 12- சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர் நிறுவனம் இந்திய உருக்கு சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், தமிழ்நாட்டில் பிரதான நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனம் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. (Fe550D CRS TMT) கம்பி களை அறிமுகம் செய்துள்ளது. இது துருப்பிடிக்காத தன்மை கொண்டது. இந்த கம்பிகள் உயர் தரத்திலான இரும்புத் தாதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனு டன் சரியான விகிதத்தில் தாமிரம், குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியவை சேர்க்கப் பட்டு துருப்பிடிக்காத வகையில் உருவாக்கப்படுகிறது. இந்தக் கம்பிகள், கட்டிடத்தின் ஆயுள்காலத்தை நீட்டிப்ப தோடு, சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் தாக்குப்பிடிக்கிறது. இதனால் அடிக்கடி பழுது ஏற்படுவது அல்லது மாற்றங்கள் செய்வது குறைகிறது என்று அந்நிறுவனத் தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மெட்ரோ ரயில், பெங்களூர் - சென்னை விரைவுச் சாலை, சென்னை வெளி வட்டச் சாலை மற்றும் சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச் சாலை போன்ற முக்கிய உள் கட்டமைப்புத் திட்டங் களுக்கு சூர்யதேவ் தனது 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி கம்பிகளை வழங்கியுள்ளது.
மின்சாரம் தாக்கி நகை பட்டறை ஊழியர் பலி
அம்பத்தூர், மே 12- குன்றத்தூர் அருகே டி.வி. கேபிளை சரி செய்த போது மின்சாரம் பாய்ந்து கணவர் பலியானார். காப்பாற்ற முயன்ற அவரது மனைவி காயமடைந்தார். குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை ஊராட்சி ரோடு தெருவைச் சேர்ந்தவர் மணி கண்டன் (44). இவர் நகை பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி யுவராணி (40). இவர்களுக்கு பிரவின் (17) என்ற மகனும், கிருபா (14)என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் உள்ள டி.வி. சரியாக தெரியவில்லை. இதனால் மணி கண்டன் டி.வி. கேபிளை சரி செய்து கொண்டி ருந்தார். அப்போது கேபிளில் இருந்த மின்சாரம் மணிகண்டன் மீது பாய்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி யுவராணி ஓடிவந்து கணவனை காப்பாற்ற முயன்றார். அப்போது யுவராணி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனையும், யுவராணியையும் மீட்டு கோவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித் துள்ளனர். காயம் அடைந்த யுவராணிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறை யினர் மணிகண்டன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை, மே. 12- புழலில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான எந்திரத் தில் தீப்பிடித்ததில் மின் உதிரி பாகங்கள் வெடித்து சிதறியது. புழலில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான அலுவ லகம் கதிர்வேடுபகுதியில் உள்ளது. இங்கிருந்து செங்குன்றம், கொளத்தூர் ஆகிய சுற்று வட்டார பகுதி களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஞாயி றன்று காலை சுமார் 7 மணி யளவில் திடீரென மின் சப்ளை செய்யும் டிரான்ஸ் பார்மரில் ஒரு பகுதி எரியத் தொடங்கி அதிலிருந்து ஸ்பீடர் எனப்படும் கருவி வெடித்து சிதறியதால் தீப் பிடித்து எரிய தொடங்கியது இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த னர். செங்குன்றம் தீய ணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். பின்னர் ஊழியர்கள் அதை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைப் பட்டது.
சாலை விபத்தில் சுகாதார ஆய்வாளர் பலி
திருவண்ணாமலை,மே.12- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வெளியே வரும் போது லாரி மோதி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வா ளராக பணியாற்றி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவன் நாயர் (45) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே. 7 அன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இந்நிலையில் கடந்த மே 9 அன்று மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது சுற்றவட்ட சாலையில் வந்த லாரியில் அடிபட்டு உயிரிழந்தார். இதையடுத்து திருவண்ணாமலை போலீசார், ராகவன் நாயர் உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து, ராகவன் நாயர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் மே 15 கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
வேலூர்,மே 12- தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கமான 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு எனும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் வருகின்ற மே 15 அன்று ஆம் தேதி (புதன் கிழமை) வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 விழுக்காடு உயர்கல்வி பயில இது வழிகாட்டும் வகை யில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே. ரா. சுப்புலெட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதன் அவசியம் மற்றும் உயர்கல்வி பயில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தரவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் உயர்கல்வியில் எவ்வித மான மேற்படிப்பினை தேர்ந்தெடுக்கலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் சிறந்த கல்வி வழிக்காட்டி வல்லு நரான ஜெயபிரகாஷ் காந்தி, அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) அதியமான், கலை மற்றும் அறிவியல் கல்வியில் எந்த வகையான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அ. மலர் மற்றும் அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவம் போன்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும் தங்களது அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்க உள்ளனர். மேலும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வங்கி கல்வி கடன் பெறுவது குறித்து வங்கியாளர்களின் சார்பில் கருத்துரைகள் வழங்கப்படவுள்ளது.
கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கிருஷ்ணகிரி,மே 12- தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே மாட்டு தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவ்விடத்துக்குச் சென்ற ஓசூர் கலால் காவல் துறையினர் 12 அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அப்புறப்படுத்தி,இதில் தொடர்புள்ள ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் இன்று கல்லூரி கனவு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி,மே 12- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள், மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதற்கு கல்லூரி கனவு வழிகாட்டு தல் நிகழ்ச்சி திங்கட்கிழமை (மே13) சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.