புதுச்சேரி,ஜன.30- புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகர் தெற்கு பகுதியில் உள்ள கசாப்புக்காரன் தோப்பில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீதிக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டும் விழா செவ்வாய்க் கிழமை (ஜன.30) நடை பெற்றது. இந்த விழாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் கலந்து கொண்டு பெயர் பலகை திறந்து வைத்தார். விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் தாட்சாயணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் முத்தியால் பேட்டை கட்சி கிளைச் செயலாளர் பாரி, வனஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.