கள்ளக்குறிச்சி,ஜூலை 24-
கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலை நினைவு பரிசாக வழங்கினார்.
அப்போது அமைச்சர் கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் எம்எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கயற் கண்ணி, சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.