ஈரோடு, மார்ச் 7- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார் பில் நாடும், நாமும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார் பில் நாடும், நாமும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு கூட லிங்கம் திடலில் நடைபெற்றது. எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஓய்வூதியர், உற்றார், உறவி னர்களுக்கும், நட்புகளுக்கும் முன் னெடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் வ.பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க மேனாள் தலைவர் கே. ராஜ்குமார், ஓய்வூதியர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள் ளிட்டோர் உரையாற்றினர். முடி வில், எஸ்.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். தருமபுரி இதேபோன்று, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தின் சார்பில், சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில், சங் கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பழ னிச்சாமி தலைமையில் சிறப்பு கருத் தரங்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள் வரவேற் றார். இதில், மாநில துணைத்தலை வர் டி.குப்பன், மாவட்டப் பொருளா ளர் கே.கேசவன், போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்க மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் டி.பாஸ்கரன், மின்வா ரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.