சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்க கோரி ஆக.1 அன்று தென்சென்னையில் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி ஜூலை 26 அன்று கோட்டூரில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் பேசினார். கூட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ம.சித்ரகலா தலைமை தாங்கினார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணைச்செயலாளர் ஜி.வெங்கடேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இரா.பாரதி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜே.ஜூலியட், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர்கள் வி.கவிதா (மாதர் சங்கம்), க.பாலாஜி (வாலிபர் சங்கம்) ஆகியோர் பேசினர்.