விழுப்புரம், பிப்.6- விழுப்புரம் வட்டம், கல்பட்டு (மேற்கு) கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பு வகித்த எஸ்.பார்த்தசாரதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியிட மாற்றம் முறையற்றது என்றும், பணி இடமாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிப்.5 முதல் தர்ணாவில் ஈடுபட்ட வருகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வில்வநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதுகுறித்து விழுப்புரம் கோட்டாட்சியர் காஜா சாகுல்ஹமீது கூறுகையில்,“நான் பொறுப்பேற்பதற்கு முன்பு இந்த பணியிட மாறுதல் நடந்தது. கிராம நிர்வாக அலு வலர்கள் கோரிக்கைகள் ஆட்சியரின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்” என்றார்.