districts

img

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் தீக்கதிர்

திருவள்ளூர், ஜூன் 12-   

     இருளர் இன மக்களின் வாழ்வில் என்றும், உறுதுணையாக விளங்கி வரும்  தீக்கதிரை வலுப்படுத்த 30 கிளைகளில் 6 மாதத்திற்கான சந்தா வழங்குவது என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பேரவை முடிவு செய்துள்ளது.

   தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று (ஜுன் 11) திருத்தணியை அடுத்த பீர குப்பத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, பொருளாளர் எஸ்.குமரவேல், மாநில துணைத் நிர்வாகி கள் பிரகாஷ், இ.கங்காதுரை, டில்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

   இதில் பங்களாமேடு, வாழ வந்தான் கோட்டை, கடம்பத்தூர், பூதூர், ஏனம்பாக்கம், ஏகாட்டூர், பாக்கு பேட்டை என மாவட்டம் முழுவதும் ஏராளமான கிராமங்களில் இருளர் இன மக்களின் குடிநீர், குடிமனை பட்டா, சாதி சான்றிதழ், மின் இணைப்பு, சாலை போன்ற அடிப்படை தேவைகளை தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற தால்,  இருளர் இன மக்களின் அடிப்படை தேவைகள் பெரும்பாலும் நிறை வேற்றப்பட்டன. இதன் மூலம் மலை வாழ் சங்கமும் மாவட்டத்தில் வளர்ச்சி யடைந்து.ஒடுக்கப்பட்ட மக்களின் செங்குரலாய் ஒலிக்கும் தீக்கதிரை தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தி யில் கொண்டு செல்லும் வகை யில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் 30 கிளை களில் முதல் கட்டமாக 6 மாத சந்தா வாங்குவது என முடிவு செய்துள்ள னர்.

      மேலும் 53 கிராமங்களில் உள்ள இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜுன் 27 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருத்தணி ஒன்றிய தலைவர் பார்த்தி பனை சாதி பெயரை சொல்லி இழி வாக பேசிய நபர் மீது உரிய நட வடிக்கை எடுக்காத திருத்தணி காவல்துறையினர் அடாவடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  முன்ன தாக கூட்டத்தில்  அசோக் தாவ்லே எழுதிய பழங்குடி மக்களின் தாயாக போற்றப்படும் "கோதாவரி பாரு லேக்கர்" புத்தகத்தை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் அறிமுகம் செய்து பேசினார்.