கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 20), திருத்தணி தலைமை தபால் நிலையம் எதிரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி.பாபு தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்ட செயலாளர் என். ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.