திருவள்ளூர், டிச.22- நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி விளிஞ்சியம்பாக்கத்தில் வீடு கடைகளை இடித்த ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் (எண்.5ல்), பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன், பழங்குடி இன மக்கள் உட்பட அனைத்து சமூக மக்கள் என 172 குடும்பங்கள் நாடு சுதந்திரம் அடை வதற்கு முன்பிருந்து வாழ்ந்து வரு கின்றனர். முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தால் இம்மக்க ளுக்கு 1965 ஆம் ஆண்டு 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 100ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இங்கு நீர் பிடிப்பு பகு தியோ, ஏரியோ இல்லை என்ப தால்,வருவாய்த்துறையினர் சுமார் 60 குடும்பங்களுக்கு 1965 ஆம் ஆண்டு குடி மனை பட்டா வழங்கியுள்ளது. தற்போது 172 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தால் குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை, தெரு விளக்கு மற்றும் ஆவடி மாநகராட்சிக் குட்பட்ட மேம்படுத்தப்பட்ட ஒரு பகுதியாக விளிஞ்சியம்பாக்கம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10.12.2023 அன்று திடீரென்று நீதிமன்ற உத்தரவு என்று சொல்லி வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறை ஆகியோரால் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டது. வீடுகளை இடித்து அப்புறப்படுத்தியதால் அங்கு வாழும் மக்கள் பெருத்த அச்சத்துடனும், அதிர்ச்சியுடனும் உள்ளனர். மாணவர்கள் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மக்களின் வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்திடக்கோரி ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (டிச 22), பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை முறையாக பேச்சுவார்த்தை நடத்தாமல் வட்டாட்சியர் மோதல் போக்கை கடைப்பிடித்தால், வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்று கையிட்டனர். காலை 11 மணிக்கு துவக்கிய போராட்டம் பகல் 2 மணிவரை நீடித்தது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு பேசுகையில், மழை வெள்ளத்தில் சென்னை, திருவள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் வீடுகளை இழந்து நடுத்தெரு வில் வாழ்ந்து வரும் நிலையில், விளிஞ்சியம்பாக்கத்தில் வாழ்ந்து வரும் வீடுகளை ஆவடி வட்டாட்சியர், பொதுப்பணித்துறை யினர் இடித்துள்ளனர். நீதிமன்றம் வீடுகளை இடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எந்த முன்அறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்தது மனித உரிமை மீற லாகும். மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் என எந்த உத்தரவும் இல்லாமல் ஏழைகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.இது கண்டிக்க தக்கதாகும். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமே ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது.
இப்படி ஏராளமான நீர்நிலைகளை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதையெல்லாம் அகற்றாத நிர்வாகம், சாதாரண மக்கள் காலம்காலமாக வாழ்ந்து வரும் வீடுகளை இடிக்கும் ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார் மீது தமிழ்நாடு அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு தமிழ்நாடு வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாநில துணைச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் மா.பூபாலன், ஆவடி நகர் மன்ற உறுப்பினர் ஏ.ஜான், மாதர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.லதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி ஆர்.ராஜன், வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி கள் ஜி.ராஜா, டி.டில்லி, ஏழுமலை, வேழவேந்தன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,விளிஞ்சியம்பாக்கம், பாரதி தாசன் நகர் போராட்டக்குழு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.