கிருஷ்ணகிரி, ஆக.19- ஓசூர் மாநகராட்சி எல்லைக்குள் தேன்கனிக்கோட்டை சாலையில் தின்னூர் பின்பகுதியில் வாசவி நகர் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் 20க்கும் மேற்பட்ட தெருக்களில் 1200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு உரு வாக்கப்பட்ட வாசவி நகரில் அரசு ஊழி யர்கள், ஆலைத்தொழிலாளர்கள் , அதி காரிகள் என நடுத்தர மக்களே அதிகம் வசிக்கின்றனர். நகருக்கு மாவட்ட குடியிருப் போர் நல சங்கம்,வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் இயக்கங்கள் காரணமாகவே இந்நகரின் பெரும்பாலான சாலைகளுக்கு தார், சிமெண்ட் சாலைகள்,அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த நகரில் குண்டும் குழியுமான சாலைகளே மக்களை வரவேற்கிறது. மழைக்காலத்தில் சேரும் சகதியுமாக மாறிவிடும். இந்த பிரதான சாலையை சீர்செய்யக்கோரி பல முறை மனுக்கள் கொடுத்தும், நேரில் புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவ்வழியை கடந்து செல்பவர்கள் விபத்து களுக்கு ஆளாகி வருகின்றனர். மாநகராட்சி ஆணையரும், நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு சாலையை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் இப்பகுதி மக்களை திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.