districts

img

ரயில் நிலையங்களில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி

ரயில் நிலையங்களில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டு 1 கோடியே 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், தங்கச் செயின், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கினார். இதில் காவல்துறை கூடுதல் இயக்குநர் வி.வனிதா, முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், ரயில்வே பாதுகாப்பு படை ஈஸ்வரராவ், சென்னை இருப்புப்பாதை காவல்துறை கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.