ஓசூர், ஆக.22-
ஓசூர் காவிரி மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் ஓசூர் சாராட்சியர் சரண்யா பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் குடும்பத்தினரையும் பாராட்டி பரிசு வழங்கினார். உடல் உறுப்புகள் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மருத்துவமனை ஊழியர்கள் நாடகம் நடத்தினர். மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் விஜயபாஸ்கர்,ஜோஸ் உள்ளிட்ட மருத்துவர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.