சாதிக்கு ஒரு தொழில் விஸ்வகர்ம யோஜனா மனுவாத சதி திட்டத்தை கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே மாவட்ட துணைத் தலைவர் செம்மல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார், பொருளாளர் வீ.ஆனந்தன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா எம்.ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.