சென்னை.நவ.24- கட்டிடங்களில் இருந்து கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்கும் திட்டம் சென்னையில் நடைபெறும் பசுமை கட்டிடம் குறித்த அகில இந்திய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி இனி கட்டிடம் கட்டும்போது அந்த கட்டிடம் முழுவதும் கார்பன் உமிழ்வை வெளியிடதாக கட்டிடமாக இருந்தால் அதற்கான தரவரிசை அளிக்கப்படும். மூன்று நாள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில், இந்தியா முழுவதிலும் இருந்து கிரீன் யுவர் ஸ்கூல் திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய தொழில்கூட்டமைப்பு, இந்திய பசுமைக் கட்டிடம் கவுன்சில் (ஐஜிபிசி) ஆகியவை தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின. நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்கான இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக நாட்டின் முதல் ‘நிகர ஜீரோ கார்பன்’ மதிப்பீட்டு முறை அறிவிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டுதல்களை இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா, சென்னை பகுதி தலைவர் அஜித் சோர்டியா, ஆலிவர் பால்ஹட்செட் ஆகியோர் வெளியிட்டனர். சென்னைக்கான பிரிட்டிஷ் உயர் துணை ஆணையர் ஜம்ஷித் என் கோத்ரேஜ், சிஐஐ தலைவர் சோஹ்ராப்ஜி கோத்ரேஜ், பசுமை பள்ளி திட்டத்திற்காக இளம் மனங்களில் பசுமை உணர்வைத் தூண்டும் ஒரு ஒற்றை முழக்கத்துடன் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பசுமை உங்கள் பள்ளி திட்டமும் மாநாட்டில் தொடங்கப்பட்டது.