கள்ளக்குறிச்சி, டிச.21- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டுள்ளது அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்பில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.