கள்ளக்குறிச்சி, ஜன.12- கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் உள்ள குதிரை சந்தல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள், நலத்திட்டங் கள் குறித்து விளம்பர பதாகைகள் புகைப்பட தொகுப்பு அமைத்துள்ள னர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட னர். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறை களில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை களை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படத் தொகுப்பு கண்காட்சிகள் மாதந் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்புகள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வு கள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதல மைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.