districts

img

மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதிப் போராட்டம்

ராணிப்பேட்டை, ஜூலை 19-

    மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி புதனன்று (ஜூலை 19) சிஎஸ்ஐ வேலூர் பேராயம் பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

   வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், ரமேஷ், ஜான் சாலமோன், மருத்துவர்கள், செவிலியர்கள், பாதிரியார்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.