மாநகர போக்குவரத்து கழகம், வடபழனி பணிமனைக்குட்பட்ட ஒரு பேருந்தில் டயர் வெடித்து பயணி காயம் அடைந்தார். இதற்காக ஓட்டுனர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காலாவதியான டயர்களை பொருத்தி பேருந்துகளை இயக்க நிர்பந்திப்பது, அதற்காக ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குற்றக்குறிப்பாணை வழங்குவதை கண்டித்து திங்களன்று (ஆக.7) வடபழனி பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் என். சிவா, இணைச் செயலாளர் கே.அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர் அசோகன் உள்ளிட்டோர் பேசினர்.