கடலூர் ,ஆக.26-
கடலூர் - புதுச்சேரியில் தமிழ்நாடு பகுதியான குட்டியாங்குப்பத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை (ஆக.5) நள்ளிரவில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். கிரில் கதவு மீது பட்டு வெடித்ததில் எரிந்துள்ளது.
சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து முருகானந்தம் தூக்கணம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இந்த நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முருகானந்தத்தின் மகளை காதலித்து வந்ததாகவும் அதை முருகானந்தம் கண்டித்த நிலையில் அவர்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.