districts

ஒடுகத்தூர் அருகே பிடிபட்ட மலை பாம்பு

அணைக்கட்டு,ஆக.10-

    ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து வனத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.