குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (பிப்.1) சைதாப்பேட்டையில் இபிஎஸ் பென்சனர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஆதரித்து சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் பேசினார்.