கடலூர், டிச.15- கடல் கடந்து, மொழி கடந்த காதலித்த மணமக்களுக்கு பெண்ணாடத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 24வது மாநாட்டு மேடையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த என் ராமச்சந்திரனின் மகன் ஆர். பிரபாகரன் இவர் கஜகஸ்தான் நாட்டில் விமான பொறியாள ராக பணிபுரிந்து வந்தார். அதேபோல் கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆய்டானா ஷயக்மேதோவா விமான பொறியாளராகவும், ரஷ்யன் மொழி ஆசிரியராகவும் பிரபாகரன் பணிபுரிந்த கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். இருவரும் இரண்டு வருடமாக காதலித் துள்ளனர். பின்னர் பிரபாகரன் பணி மாறுதல் காரணமாக சார்ஜா சென்றுவிட்டார். இரு வருக்கும் ரஷ்ய மொழி மற்றும் ஆங்கில மொழி தெரிந்த நிலையில் இரண்டு நாட்க ளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பிர பாகரன் பெண்ணாடத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தங்க ளுடைய திருமணத்தை சீர்திருத்த திருமண மாக நடத்த விருப்பம் தெரி வித்திருந்தார். இந் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பி னர் உ.வாசுகி தலைமையில் ஞாயிறன்று (டிச.15) இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாநாட்டு பிரதிநிதிகளின் வாழ்த்து கோஷங்களுக்கிடையே தம்பதி யர் இருவரும் மாலை மாற்றிக் கொண்ட னர். மணமகன் பிரபாகரன் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண்ணாடம் நகர செயலாளர் அரவிந்த் மைத்துனர் ஆவார். திருமணத்தை நடத்தி வைத்த மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பேசும் போது, பாஜக மதவெறி அரசியலை மேடை போட்டு தான் நாம் விமர்சித்து பேசிக் கொண்டிருக் கின்றோம். இந்த மாநாட்டு மேடையில் நடை பெற்ற இந்த ஒற்றைத் திருமணம் அவர்க ளின் மதவெறி அரசியலை தகர்த் தெறிந்துள்ளது. மணமக்களுக்கும், இரு வீட்டருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். விழுப்புரத்தில் நடைபெற உள்ள சிபிஎம் மாநில மாநாட்டு நிதியாக ரூ. 25ஆயிரத்தை மணமக்கள் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்ட செயலா ளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பின ர்கள் எஸ்.ஸ்ரீதர், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, உள்ளிட்ட கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.