districts

img

முழங்கால் மூட்டு பாதிப்புக்கு முக்கிய காரணம் உடற்பருமன் டாக்டர் சிவமுருகன் பேட்டி

சென்னை,அக்.17 முழங்கால் மூட்டு மாற்றவேண்டிய நிலை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களில் உடற்பருமன் முக்கிய காரணம் என்று சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவ முருகன் கூறினார். அண்ணாநகரில் உள்ள தனது மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை (வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளது குறித்து செய்தி யாளர்களிடம் அவர் பேசினார்.  சிறு நீரகத்தில் யூரிச் ஆசிட் அதிகரித்தல், கட்டுப்படுத்தமுடியாத சர்க்கரை நோய், வைட்ட மின் டி பற்றாக்குறை உள்ளிட்டவை முழங்கால் மூட்டு பாதிக்கப்பட இதர காரணங்கள் என்று கூறி னார்.  பெர்பிட் முழங்கால் அமைப்பு இந்த சிகிச்சை யில் புரட்சியை ஏற்படுத்தி யுள்ளதாக குறிப்பிட்ட மருத்துவர், சிடி ஸ்கேன் மற்றும் முப்பரிமாண படத்தின் உதவியுடன் துல்லியமாக மூட்டினை பொருத்த இந்த சிகிச்சை முறை உதவிவருவதாக கூறினார்.  பெண்களுக்கு அதிக மாக மூட்டு பிரச்சனை வருகிறது என்ற அவர்  நவீன மருத்துவ சிகிச்சை யால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரண்டே நாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் என்றார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொண்டால் அவர்கள் செயற்கை மூட்டால் வாழ்நாளை கழித்து விட லாம் என்றும் இளம் வயதி னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களின் அன்றாட செயல்பாடுகள் அதிமாக இருப்பதால் மற்றொரு முறை அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.