நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் -மாணவர், மாதர் சங்கங்கள் சார்பில் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணியின் மாவட்டத் தலைவர் வி.ராஜா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ெஜய்சங்கர், வே.ஏழுமலை, எம்.கே.பழனி, ஏ.தேவி, பி.சின்னராசு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் வேடியப்பன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.