சிதம்பரம், மார்ச் 19- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து “சாதனைக்கான கூர் நோக்கு சிந்தனை” பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை மக்களியில் துறை யில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மக்களியல்துறை இணை பேராசிரியர் பீமலடதேவி வரவேற்றார். மக்களியல் துறைத்தலைவர் ரவி சங்கர்பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உறையாற்றினார். திறன் வளர்ச்சி மைய இயக்குநர் கருணாகரன், அண்ணா மலைப் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், ராஜீவ் காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், மேலாண்மை துறை தலைவர் எம். அருள் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக மக்கள் தொகையியல் துறை உதவி பேராசிரியர் அஜிஷ்குமார் நன்றி கூறினார்.