கள்ளக்குறிச்சி, மே 10 - உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் உள்ள குடிசை வீட்டில் பற்றிய தீ அடுத்தடுத்து வீடுகளுக்குப் பரவியதால்5 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த உத்தரகுமார் என்பவரின் குடிசையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்ததால் தீ மல மல வென பரவி அடுத்தடுத்த வீட்டிற்கு பரவியது. இதில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கட்டில் பீரோ, உடைகள் தானியங்கள் அரசு ஆவணங்கள் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகின. பகல் நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது