districts

மாமல்லபுரத்தில் அணுசக்தி விஞ்ஞானிகள் பங்கேற்ற மாநாடு

செங்கல்பட்டு,ஆக.26-

       மாமல்லபுரத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய சர்வ தேச கட்டமைப்பு நம்பகத் தன்மை மாநாடு வெள்ளிக் கிழமை நிறைவடைந்தது. இந்த மாநாட்டை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அறிவியல் தொழில்துறை, ஆராய்ச்சி துறை செயலர் மற்றும் கவுன் சில் தலைமை இயக்குநர் கலைச்செல்வி காணொலி வாயிலாக மாநாட்டை துவக்கி வைத்தார்.  

    மாநாட்டு தலைவரும் சென்னை ஐ.ஐ.டி பேராசிரி யர் ரகு பிரகாஷ், இந்திய அணுமின் கழகத்தின் பொறி யியல் பிரிவு செயல் இயக்கு நருமான ராமமோகன், தர உறுதி செயல் இயக்குநர் தாமஸ் மேத்யூ மற்றும் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், பொறி யாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாநாட்டில் அணுசக்தி பாதுகாப்பு, ரசாயனம், விண் வெளி ஆய்வு, எண்ணெய் கிணறுகள் கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மை, வருங் கால அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு கட்டுரை கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.