ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் திருவொற்றியூரில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆர்.குசேலர் (உழைக்கும் மக்கள் மாமன்றம்), பழனி (தொமுச), சு.லெனின்சுந்தர், ஆர்.ஜெயராமன், கே.ஆர்.முத்துசாமி, ஜெயகோபால் (சிஐடியு), சம்பத் (ஏஐடியுசி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.