districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கம்

போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. இதனையொட்டி விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகரராஜா கையெழுத்திட்டார். சங்கத்தின் பகுதி செயலாளர் மணிமாறன், பொருளாளர் கார்த்திக், நிர்வாகிகள் ராஜ்குமார், ஆகாஷ், அசோக் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.