districts

img

உத்தனப்பள்ளி, சூளகிரியில் விவசாயிகள் சங்க கிளை உதயம்

கிருஷ்ணகிரி, ஜன.31- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி அருகில் துப்பு காணப் பள்ளி கிராமத்தில் 20 ஆண்டு களுக்கு முன்பு ஏழை மக்களுக்கு 25க்கும் மேற்பட்ட வீட்டு மனை பட்டா தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.  அரசு அதிகாரிகளால் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், மனைகளாக பிரித்து கொடுக்கவில்லை. இதனால் வீடு கட்டுவதற்கு அனுமதியும் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க தலைவர்களின் முயற்சியில் பட்டாதவர்கள் வீடு கட்டி வருகின்றனர். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா பெயர் வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க கிளை துவக்க விழாவும் நடைபெற்றது. கிளை செயலாளர் பக்சிநிஷா தலைமை தாங்கினார். தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். அதேபோல் சூளகிரி வட்டம், பஸ் தலப் பள்ளியிலும் கிளை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் மாநிலத் துணைத் தலைவர் பி.பெருமாள் சங்க கொடி ஏற்றி வைத்தும் பெயர் பலகையை திறந்து வைத்தும் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன் பொருளாளர் எம்.எம்.ராஜூ ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளை நிர்வாகிகள் அகமது பாஷா, பத்துனிம்மா, பாத்திமா, அசீனா, சலீமா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஸ்தலப்பள்ளி கிளைத் தலைவர் திம்மராயப்பா, செயலாளர் பால்ராஜ், பொருளாளர் திமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திம்மக்கா, ராமச்சந்திரன், சோபா, அம்பிகா, பால்ராஜ், நஞ்சப்பா , திம்மா கலந்து கொண்டனர்.