8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் மசோதாவை கண்டித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு செவ்வாயன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைத்தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.