districts

img

அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் 2 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காலியாக உள்ள  செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் 2 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுசிலாகுமாரி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன தலைவர்கள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன்,ஹரிதாஸ்,முனுசாமி உட்பட திரளான செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.