districts

இலங்கையிலிருந்து 9 மீனவர்கள் சென்னை திரும்பினர்

ஆலந்தூர்,ஆக.18-

      ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதி யில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள், கடந்த ஜூலை மாதம் 25 ஆம்  தேதி அதிகாலையில், கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டு இருந்த னர்.

      அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சிறையில் அடைத்தனர். ஒன்றிய, மாநில அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப் பட்டனர். இந்த நிலையில் அவர்கள் அனை வரும் வெள்ளியன்று காலை கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர் களை தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வள த்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர்  வாகனம் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.