districts

10ம் வகுப்பு தேர்வில் புதுச்சேரியில் 89.14 விழுக்காடு தேர்ச்சி

 புதுச்சேரி,மே.10- 10ம் வகுப்பு பொதுதேர்வில் புதுச் சேரி மாநிலத்தில் 89.14 விழுக்காடு  மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளி களின் தேர்ச்சி விகிதம் 0.84 தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல்  8ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்காலில்10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவு களை பள்ளி கல்வித்துறை சார்பில் வெள்ளியன்று (ஏப்-10) வெளியிட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த மார்ச், ஏப்ரலில் நடைபெற்ற 10ம்  வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள  289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்  7,590, மாணவி கள் 7,362 என மொத்தம் 14,952 பேர் தேர்வு  எழுதினர்.   தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் - 6,527, மாணவிகள் 6,801  என மொத்தம் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விழுக்காடு 89.14 விழுக்காடாகு. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் சொற்ப எண்ணிக்கையில் 0.02  விழுக்காடு அதிகரித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 85.99 விழுக்காடும், மாணவிகள் 92.38 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்தாண்டும் மாண வர்களை காட்டிலும் மாணவிகள் 6.39 விழுக்காடு பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளில்  6,789 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 181 தனியார் பள்ளி களில் ஆண்கள் - 4,666, பெண்கள் - 4,263 என மொத்தம் 8,929 பேர் தேர்வு  எழுதினர். இதில் ஆண்கள் - 4,441, பெண்கள் - 4,181 என 8,625 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். மேலும், புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் 81.69 விழுக்காடு  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை விட 0.14 விழுக்காடு குறைவாகும். இதேபோல், காரைக்காலில் உள்ள அரசு பள்ளி கள் 65.31 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை காட்டிலும் 2.75 விழுக்காடு குறைவு ஆகும். மொத்தமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 78.08 விழுக்காடு ஆகும். கடந்தாண்டு அரசு பள்ளிகள் 78.92 விழுக்காடு தேர்ச்சி பெற்றன. இதனை ஒப்பிடுகையில் இந்தாண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி  விகிதம் 0.84 விழுக்காடு குறைந் துள்ளது. அதே சமயம், 181 தனியார் பள்ளி களின் தேர்ச்சி விகிதம் 96.60 விழுக்காடு  ஆகும். கடந்தாண்டு 95.61 விழுக்காடு தேர்ச்சிதான் பெற்றிருந்தன. இதை ஒப்பிடுகையில், இந்தாண்டு தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 0.99 விழுக்காடு அதிகரித்துள்ளது. 100 விழுக்காடு தேர்ச்சி  பெற்ற அரசு பள்ளிகள் கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளி, வாதானூர் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப்பள்ளி, கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, சுத்துகேணி அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லியனூர் பிள்ளையார் குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்தைபுதுக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, வரிசிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி என புதுவையில் 7 அரசு பள்ளிகள், காரைக் காலில் ஒரு அரசு பள்ளி என மொத்தம் 8 அரசு பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், சமூக  நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி  வரும் பிள்ளைச்சாவடி ஆனந்தரங்கப் பிள்ளை சிறப்பு பள்ளி மற்றும் புதுவை யில் உள்ள 82 தனியார் பள்ளிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளி கள் உட்பட மொத்தம் 107 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு கல்வித்துறை  சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.