districts

img

8 ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கொடியேற்றம்

விழுப்புரம், செப்.19- விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 9 ஊராட்சி மன்றங்களில் கொடியேற்றம் மற்றும் சங்க பெயர் பலகைகள் திறப்பு விழா செப்.19 அன்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் சிறுதலை பூண்டி உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் கொடி ஏற்றி பெயர் பலகைகளை சங்கத்தின் அகில இந்திய தலைவர் என். நம்புராஜன் திறந்து வைத்தார். மாநிலத் துணைத் தலை வர் வீ.இராதா கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்  ஏ. கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர். எம்.  முத்துவேல், ஒன்றிய அமைப்பாளர் சி.குமார் ஆகியோர் பங்கேற்றனர்.