செங்கல்பட்டு, ஏப்.20- நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி யில் 71.55 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகி யுள்ளது. காஞ்சிபுரம் மக்களவை தனித்தொகுதி யில் நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு செய்யூர் மதுராந்தகம் உத்திரமேரூர் காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உட்பட்டு 71.55 விழுக்காடு வாக்குகள் பதிவாகி யுள்ளன. செங்கல்பட்டு சட்டமன்றத்தில் உள்ள 4லட்சத்து 21ஆயிரத்து 729 வாக்காளர்களில் 2லட்சத்து 63ஆயிரத்து 332 வாக்கு பதிவு செய்துள்ளனர் 62.44 விழுக்காடாகும். திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 3லட்சத்து 1 ஆயிரத்து ,935 இதில் 2லட்சத்து 22ஆயிரத்து 875 வாக்காளர்கள் மட்டுமே வாக்குப்பதிவு செய்துள்ளனர் 73.83 விழுக்காடாகும். செய்யூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2,21,516ஆகும் இதில்1,68,237 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர் இது 78.95 விழுக்காடாகும். மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்டு 2,24,715 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,77,259 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர் இது 78.88 விழுக்காடாகும். உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட 2,67,012 வாக்காளர்கள் உள்ளனர் இதில் 2,05,341 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர். இது 76.90 விழுக்காடாகும். காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 3,11,959 வாக்காளர்களில் 2,16,220 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர் இது 69.31 விழுக்காடாகும். காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதி களில் உள்ள 17லட்சத்து 48ஆயிரத்து 866 வாக்காளர்களில் 12லட்சத்து 53ஆயிரத்து 264 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட வாக்காளர்களில் ஒட்டு மொத்த மாக 71.55 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளது குறிப் பிடத்தக்கது.