districts

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 70.17 விழுக்காடு வாக்குகள் பதிவு

விருதுநகர், ஏப்.20- விருதுநகர் மக்களவைத் தொகுதியில்  70.17 விழுக்காடு வாக்குகள் பதிவாகி யுள்ளது என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, திருமங்கலம் மற்றம் திருப்பரங் குன்றம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், மொத்தம் 7 லட்சத்து 33  ஆயிரத்து 217 ஆண்கள், 7,68,520 பெண் கள் மற்றும் 205 இதர வாக்களர்கள் என மொத்தம் 15 லட்சத்து 01 ஆயிரத்து 942 வாக்களர்கள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளியன்று காலை  7 மணி முதல் அனைத்து வாக்குச் சாவடி களிலும்  சீரான நிலையில் வாக்குப்  பதிவுகள் நடைபெற்றன. இதில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் மிகவும் ஆர்வத்து டன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேவேளை, ஏற்கெனவே, கடந்த பல தேர்தல்களில் வாக்களித்தவர்களின் பெயர்கள் இத்தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு  இருந்தது. இதனால்,வாக்குச் சாவடியின் முன்பு பூத் சிலிப்புகள் தரும் அரசு அலுவலர்களிடம் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பலர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.   மேலும், ஒரே வாக்குச் சாவடியை இரண்டாக தேர்தல் அலுவலர்கள்  பிரிக்கின்றனர். அப்போது ஒரு வாக்காளர் பட்டியலும் இரண்டாக பிரிக்கப்படுகிறது. அந்நேரத்தில்,  ஏற்கெனவே, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் விடு பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், குறிப்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களின் பெயர்களும், வாக்குச்  சாவடியை மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பித்தவர்களின் வாக்குகளும் கணிசமாக விடுபட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 70.17 விழுக்காடு வாக்குகள் பதிவாகி யுள்ளன.