விழுப்புரம்,ஆக.17-
விழுப்புரம் அரசு மருத்து வக் கல்லூரியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட் டில் மாணவர் சேர்க்கை நடை பெற்றது.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. இதில், அரசுப் பள்ளியில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்கள் பூவராகவன், பூவரசன், சிவகாம வள்ளி, சுகந்தி, தாரணி, தேவ தர்ஷினி ஆகிய 6 மாண வர்களுக்கு கல்லூரி முதல் வர் கீதாஞ்சலி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ஆணையை வழங்கி பாராட் டினார்.
கல்லூரியின் துணை முதல்வர் சங்கீதா, துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, நிலைய மருத் துவ அலுவலர் ரவிக்குமார், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் வெங்கடே சன், ஸ்ரீராம், நிர்வாக அலு வலர் சிங்காரம், இளநிலை நிர்வாக அலுவலர் ஸ்ரீவாட் சன், கண்காணிப்பாளர் ரபி யேசுதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.