செங்கல்பட்டு, ஏப்.20- திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் 60.21 விழுக்காடு வாக்கு கள் பதிவாகியுள்ளன நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் திருபெரும்புதூர் மக்களவை தொகுதிக் குட்பட்ட அம்பத்தூர் ஆலந்தூர் திருபெரும்புதூர் பல்லாவரம் தாம்பரம் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு 60.21 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரவாயல் தொகுதிக் குட்பட்ட 4லட்சத்து 28ஆயி ரத்து 244 வாக்காளர்களில் 2 லட்சத்து 47ஆயிரத்து 636 வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்துள்ளனர் இது 57.83 விழுக்காடாகும், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 லட்சத்து 52ஆயிரத்து 624 வாக்காளர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 894 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர் இது 60.37 விழுக்காடாகும். ஆலந்தூர் சட்டமன்ற 3,83,424 வாக்காளர்களில் 2,24,026 வாக்காளர் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர். இது 57.81 விழுக்காடாகும். திருபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட 3,83,330 வாக்காளர் களில் 2,69,887 வாக்காளர் கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர் இது 70.54 விழுக்காடாகும். பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,30,409 வாக்காளர்க ளில்2,45,735 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர் இது 57.09 விழுக்காடாகும். தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3,99,088 வாக்காளர்க ளில் 2,32,847 வாக்காளர் மட்டுமே வாக்கு பதிவு செய்தனர் இது 58.34 விழுக்காடாகும். திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட ஒட்டுமொத்த வாக்காளர்களான 23 லட்சத்து 82, ஆயிரத்தி 119ல் 14 லட்சத்து 36 ஆயிரத்தி 25 வாக்காளர்கள் மட்டுமே வாக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஒட்டுமொத்தமாக 60.21 விழுக்காடாகும்.