districts

img

மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் படுகாயம்

திருவண்ணாமலை, பிப்.20- திருவண்ணாமலை மாவட்டம், பக்கிரிபாளை யம் பகுதியில் வசித்து வரு பவர் சங்கர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு வீடு பழு தடைந்த நிலையில் தற்போது வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வீட்டை இடிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த பெரிய தம்பி, கோவிந்த ராஜ் , சதீஷ் குமார், ராஜா, ரஞ்சித் உள்ளிட்டோர் பணி யில் ஈடுபட்டு வந்துள்ளனர். வீட்டின் மேற்கூரையை இடிக்க முயன்றபோது திடீரென மேற்கூரை முழுவதும் வேலை செய்த வர்கள் மீது விழுந்தது இதில் கோவிந்தராஜ் மற்றும் பெரியதம்பி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர்.  மேலும் நான்கு பேர் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இச்சம்பவம் குறித்து செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.