districts

மேல்மருவத்தூர் செங்குன்றத்தில் சாலைவிபத்துகள் 6 பேர் பலி

மதுராந்தகம்,ஜூன் 15-  

     அச்சரப்பாக்கம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவி ராணி(42). இவர்க ளது மகன் வழி பேத்தி அக்ஷயா (வயது4). புதனன்று சேகர் தனது மனைவி மற்றும் பேத்தி யுடன் செங்கல்பட்டு ஆலப் பாக்கம் கிராமத்தில் குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வருகையில்  அச்சரப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம்  மோதிவிட்டு நிற்கா மல் சென்று விட்டது. இதில்  தூக்கி வீசப்பட்ட சேகர், அவ ரது மனைவி, பேத்தி ஆகிய  3 பேரும் சம்பவ இடத்தி லேயே இறந்தனர். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் செங்குன் றம் அருகே உள்ள அலமாதி யில் இருந்து பால்கேன் களை ஏற்றிக்கொண்டுவந்த வேன் ஒன்று  கட்டுப் பாட்டை இழந்து விபத்துக் குள்ளானது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உஜால் (25), மாணிக்ராய்(32)  உடல்நசுங்கி உயிரிழந்தனர். இதில் வாகனத்தை ஓட்டிய  வியாசர்பாடியை சேர்ந்த  ராஜேந்திரன்(45) தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.