கடலூர், ஆக.25- கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு பகுதி யில் ராஜேஷ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் பட்டாசு விற்பனைக்கான சான்றிதழ் பெற்றிருந்தனர். ஆனால் அது இந்தாண்டு இதுவரையில் புதுப்பிக்கப் படவில்லை. ஆண்டுதோறும் இவர்கள் இந்த பகுதியில் பட்டாசு விற்பனை செய்வது வழக்கம். தற்பொழுது அந்தப் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் நொச்சிக்காடு பகுதிக்கு சென்று ராஜேஷ் என்பவரது இடத்தை ஆய்வு செய்தபோது. அங்கு பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டது. பேன்சி பட்டாசுகள் தயாரிப்ப தற்கான பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டதுடன் அதற்கான 500 கிலோ வெடி மருந்து கள் அங்கு பதுக்கி வைக்கப் பட்டிருந்ததையும் கண்டு அதனை பறிமுதல் செய்த னர். மேலும் அங்கு பணி யில் ஈடுபட்டிருந்த தொழி லாளர்கள் தப்பி சென்று விட்டனர். மேலும் வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தன் அடிப்படையில் வருவாய் வட்டாட்சியர் பலராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து வெடி மருந்துகளை கைப்பற்றி அங்கிருந்த குடோனுக்கு சீல் வைத்தார். மேலும் பட்டாசு விற்பனைக்கான லைசன்ஸ் கூட இல்லாமல் குடியிருப்பு பகுதியில் அனுமதி இன்றி அளவுக்கு அதிகமான வெடி மருந்துகளை வைத்து அபாயகரமான பட்டாசு தயாரிக்கும் பணி யில் ஈடுபட்ட உரிமையாளர் களை போலீசார் தேடி வருகின்றனர்.