அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம்: 50 விழுக்காடு பணிகள் நிறைவு
சென்னை,பிப்.2- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ல் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதி மாத வரம் பால்பண்ணை காலனியிலிருந்து சிறு சேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரம் வரைஅமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சுரங்கப்பாதையாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.தி.நகர் மற்றும் கோடம் பாக்கம் போன்ற இடங்களில் களிமண் நிலம் இருந்தாலும் அடையாறு மற்றும் திரு வான்மியூர் ஆகிய இடங்களில் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.இந்த திட்டப் பணியில் சில சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பாறை மண்ணின் வழியாக சுரங்கப் பாதைகளை அமைக்க இணைக்கப் பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்த னர்.தற்போது ஆற்றின் பாதி வரையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மற்றொரு எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே பல மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும்பணியை மேற்கொள்ளும். கிரீன்வேஸ் ரோடு ஸ்டேசன் முதல் அடை யாறு சந்திப்பு நிலையம் வரையிலான 1.6 கி.மீ. தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் எந்திரம் இன்னும் 3 மாதங்களில் ஆற்றின் தெற்கு கரையை வந்தடையும் என்று மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரி வித்தார். மேலும் ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் மெதுவாக ஸ்டெர்லிங் சாலையை நோக்கி முன்னேறி வருகிறது. ஸ்டெர்லிங் சாலையை அடைய 3 மாதங்கள் ஆகலாம். மற்றொரு எந்திரம் சேத்துபட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று ஒரு மாதத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
சென்னை, பிப். 2- சென்னை அருகே பெருங்குடியில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார். பெருங்குடி சீவரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவி (28). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை அதிகாலை ராஜீவ் காந்தி சாலையில் துரைப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர், பெருங்குடி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலை தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று ரவி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலமானார்
திருவள்ளூர், பிப். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உறுப்பினர் எஸ்.தேவேந்திரன் தந்தையும், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பச்சையம்மாள் மாமனார் சுப்பிரமணி என்பவர் மாரடைப்பால் வியாழனன்று (பிப் 1) காலமானார். அவரின் உடலுக்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன், இ.மோகனா, பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபட்எபிநேசர், மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.கங்காதரன், ஆர்.சித்ரா, த.கன்னியப்பன், விதொச மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன் உட்பட்ட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான திருநின்றவூர் பெரியார் நகரில் உள்ள மயானத்தில் வெள்ளியன்று (பிப் 2) அடக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம்
திருவள்ளூர், பிப்.2- திருவள்ளூர் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, இரண்டு பெண் ஊராட்சி மன்ற தலைவர்களை மாவட்ட ஆட்சியர் பதவி நீக்கம் செய்துள்ளார். எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா என்பவர் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ல் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளை மீறியும் அச்சட்டத்தின்பாற் இயற்றப்பட்டுள்ள விதிகளை மீறி கட்டிட வரைபட அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசு தலைப்புகளுக்கு வர வேண்டிய தொகை நிதி இழப்பு ஏற்படுத்தியதும் வகையிலும், ஊராட்சி கூட்டங்களை கூட்டப்படாமல் முறையற்ற முறையில் ஊராட்சி தீர்மானம் இயற்றியதும் ஊராட்சி கணக்கிற்கு வர வேண்டிய தொகையினை காலதாமதமாக செலுத்தியது ஆகிய காரணங்களுக்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11) ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா என்பவரை ஜனவரி 31 அன்று முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். வெங்கத்தூர் இதே போல் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் .சுனிதா என்பவரும் விதிகளை மீறி முறைகேடாக செயல்பட்டதால் ஜனவரி 31 அன்று முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.'
மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம்
சென்னை, பிப். 2 எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் வரும் திங்கள் முதல் (பிப்.5) பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை,பிப்.2- சென்னையில் சனிக்கிழமை அன்று(பிப்.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கல்வி உதவித் தொகை திட்டத்திற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடைபெற உள்ளதால் பள்ளி களுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.சனியன்று நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு கள் 10ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது என தெரி வித்துள்ளார்.
சென்னையில் 5 இடங்களில் மேம்பாலம்: நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரம்
சென்னை,பிப்.2- சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்க ளில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்ட மிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் 5 இடங்களில் மேம்பாலம் கட்டு வதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. கொருக்குப் பேட்டை ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும்தொடங்கி மெதுவாக நடக்கிறது.இந்த மேம்பால பணியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 2,437 சதுர மீட்டர் தனியார் நிலத்தையும் 194 சதுர மீட்டர் அரசு நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கணேச புரம் ரயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களி டம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளம் கொண்டதாகும். 15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது.மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2860 சதுர மீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகிறது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இந்த மேம்பாலம் கான்கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் (கிரேடர்) இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ரயில்வே மேம்பாலங்களுக்கு இது போன்ற இரும்பு உத்திரங்கள் தான் பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும்.இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பிப். 16 அகில இந்திய வேலை நிறுத்தம் புதுவை ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க முடிவு
புதுச்சேரி,பிப்.2- பிப்ரவரி 16 ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளனர். புதுச்சேரி மாநில ஆட்டோ சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் முதலி யார் பேட்டை அலுவலகத்தில் நடை பெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநிலச் செயலாளர் சீனுவாசன், சங்க நிர்வாகிகள் மது,துளசிங்கம், நூர்முகமது, ராமு,மனோ கரன், பழனி பாலன், செந்தில்குமார், சங்கர், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். புதுச்சேரி அமைப்பு சாரா நல சங்கத்தில் பதிவு செய்து உயிரிழந்து 8 ஆண்டு ஆகியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர் களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இயற்கை மற்றும் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு உதவித்தொகை புதுச்சேரி அரசு உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2020 ஆம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அரசாணையை நடைமுறைப்படுத்தாமல் தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் நடவடிக்கையை கைவிட்டு உடனடியாக வாரியத்தை செயல்பாட்டுக்கு அரசு கொண்டு வரவேண்டும். ஒன்றிய, மாநில அரசுகளின் தொழிலா ளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பிப். 16 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி மறியல் போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றினர்.
பண்ருட்டியில் நகை, பணம் திருட்டு
கடலூர்,பிப்.2- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது சித்திரைச் சாவடி கிராமம். இங்குள்ள கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால், ஊர் மக்கள் அனைவரும் அந்த கோவிலுக்கு சென்று விட்டார். இந்த நேரத்தில், லாரி ஓட்டுநர் கதிரேசன் (32) வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ள னர். பிறகு, பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்தபோது, வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவ ழைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.