districts

img

புதுச்சேரியில் சுவர் இடிந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி

புதுச்சேரி, மார்ச் 31- புதுச்சேரியில் வாய்க்கால் கட்டும் பணியின் போது பக்கவாட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து  5 தொழிலாளர்கள்  பலியாகினர். புதுச்சேரி மாநிலம், முதலியார்பேட்டை தேங்காய்திட்டு வசந்தம் நகரில்   மின்துறைக்கு சொந்தமான மதில்சுவர் அருகே உள்ள வாய்க்கால் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி மூலம் நடைபெறும் இந்த பணியை வேல்ராம்பட்டு திருமால் நகரை சேர்ந்த ஒப்பந்ததாரர் மோகன் எடுத்துள்ளார். தமிழக பகுதியான அரிய லூர், திருவாரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டிட தொழி லாளர்கள் 4 பெண்கள் உள்பட 16 பேர் புதுச்சேரியிலேயே தங்கி இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல தொழிலாளர்கள் வாய்க்கால் கட்டு மான பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி கழிவுகளை சுவற்றின் வெளியே கொட்டியுள்ளனர். அப்போது சில தொழிலாளர்கள் சுவற்றின் மேலே நின்றுக்கொண்டும், சிலர் வாய்க்காலில் நின்றுக்கொண்டும் வேலை செய்துள்ளனர். காலை  9 மணியளவில் அவர்களில் 7 பேர் சாப்பிட  வெளியில் சென்றனர்.  சிறிது நேரத்தில் மீதம் உள்ளவர்கள்  சாப்பிட செல்லலாம் என நினைத்து புறப்பட தயாரான போது திடிரென மின்துறைக்கு சொந்தமான மதில்சுவர்  சரிந்து விழுந்தது. இதனால் வேலை செய்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி னர். அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். அதோடு உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு  வந்த மீட்புபடையினர் இடிபாடு களில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் வராத காரணத்தி னால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிய வில்லை. இதனையடுத்து அங்கிருந்த மினி லாரி மூலம் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். இதில் பாக்கியராஜ்(48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழி யில் பாலமுருகன் (வயது 38 அந்தோணி (வயது 65) ஆகியோரும் உயிரிழந்த னர். இதில்  தீவிர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்(53),ராஜேஷ்கண்ணா(50) ஆகியோர்  சிகிச்சை பலனின்றி இறந்தனர். குண சேகர், ஜெய்சங்கர், சீனிவாசன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  முதலியார்பேட்டை போலீசார் விசா ரணை நடத்தியதில்  தொழிலாளர்கள் பாது காப்பு உபகரணம் எதுவும் இன்றி வேலை செய்துள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர், சூப்பர்வைசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  உதயநிதி ஸ்டாலின் இரங்கல்  இந்நிலையில் புதுச்சேரியில் ஞாயிறன்று பிரச்சாரத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறினார.